மேட்டூர் நகராட்சி பொறியாளர் பணி இடைநீக்கம்

மேட்டூர் நகராட்சி பொறியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேட்டூர்:
மேட்டூர் நகராட்சி பொறியாளராக மணிமாறன் என்பவர் பணியாற்றி வந்தார். மேலும் இவர் நகராட்சி ஆணையாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில் நங்கவள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் மணிமாறன் பணியாற்றியபோது முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே கடந்த 30-ந் தேதியுடன் ஓய்வு பெற இருந்த நிலையில், அவரை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசின் நிர்வாக செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





