தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வெடிப்பு



பந்தலூர்-கோழிக்கோடு இடையே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வெடிப்பு ஏற்பட்டது.
பந்தலூரில் இருந்து மேங்கோரேஞ்சு, சேரங்கோடு, சேரம்பாடி வழியாக கோழிக்கோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மேங்கோரேஞ்சு பகுதியில் கேபிள் பதிக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த குழி சரிவர மூடப்படவில்லை. இதன் காரணாமாக கனரக வாகனங்கள் சென்று வரும்போது, அந்த சாலையில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் சுப்பிரமணி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவரது நடவடிக்கையின்பேரில் பணியாளர்களை கொண்டு அந்த வெடிப்பு சீரமைக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire