பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
![பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு](https://media.dailythanthi.com/h-upload/2023/02/13/1143253-13780561.webp)
மாசிமாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அது மட்டுமின்றி தமிழ்மாத பிறப்பு, கிருத்திகை, வார விடுமுறை உள்ளிட்ட நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அந்த வகையில் மாசி மாதப்பிறப்பான நேற்று பழனி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே மலைக்கோவில், திருஆவினன்குடி கோவிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் மாசி மாதப்பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக மலைக்கோவில் ஆனந்தவிநாயகருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.