காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை


காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தேய்பிறை அஷ்டமி

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம் நடந்தது. பின்னர் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து காலபைரவர் உற்சவம், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தன. பின்னர் சாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி கோவிலை சுற்றி வந்து வழிபட்டனர்.

மாவட்டம் முழுவதும்

இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மட்டும் இன்றி கர்நாடக மாநில பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story