சுப முகூர்த்த நாள், வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்


சுப முகூர்த்த நாள், வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 5 April 2024 1:51 AM GMT (Updated: 5 April 2024 6:07 AM GMT)

சுப முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

05/04/2024 (வெள்ளிக் கிழமை) 06/04/2024 (சனிக்கிழமை) மற்றும் 07/04/2024 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 05/04/2024 (வெள்ளிக்கிழமை) இன்று 265 பேருந்துகளும், 06/04/2024 (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 05/04/2024 வெள்ளி இன்று 55 பேருந்துகளும் மற்றும் 06/04/2024 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 05/04/2024 (வெள்ளிக்கிழமை) இன்று 265 பேருந்துகளும், 06/04/2024 (சனிக்கிழமை) 350 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 05/04/2024 இன்று 55 பேருந்துகளும், 06/04/2024 அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story