உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர மரத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 6 பேர் பலி


உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர மரத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 6 பேர் பலி
x

சாலையோர மரத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை,

ராணிப்பேட்டையை சேர்ந்தவர்கள் சுற்றுலா வேனில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் எனும் இடத்தில் கனமழை காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையோர மரத்தில் அதிபயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story