சாம்சங் ஊழியர்களுக்கு லிப்ட் கொடுத்து டிரைவர் செய்த அதிர்ச்சி செயல்: வெளியான சிசிடிவி காட்சி


சாம்சங் ஊழியர்களுக்கு லிப்ட் கொடுத்து டிரைவர் செய்த அதிர்ச்சி செயல்: வெளியான சிசிடிவி காட்சி
x

சாம்சங் ஊழியர்கள் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியில் சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்திற்கு வரும் ஊழியர்கள் சுங்குவார்சத்திரம் அருகே நடந்து வந்து கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த மினி வேன் டிரைவர் நான் அந்த வழியாக தான் செல்கிறேன் நீங்கள் வருகிறீர்களா என்று கேட்டு வலுக்கட்டாயமாக 13 பேரை ஏற்றியதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் அந்த மினி வேன் வாகனம் சாம்சங் தொழிற்சாலை அருகே வரும் பொழுது அதன் டிரைவர் வாகனத்தை மிகவும் வேகமாக தாறுமாறாக இயக்கியுள்ளார். அப்பொழுது சாம்சங் நிறுவனத்தின் தடுப்பு சுவரில் மோதி மினி வேன் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story