நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா: ராசிபுரத்தில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா: ராசிபுரத்தில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ராசிபுரம்:
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. இதையொட்டி ராசிபுரம் வட்டார சான்றோர் குல நாடார் சமூகத்தின் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. முன்னதாக தீர்த்தக்குட மற்றும் தேங்காய் பழ தட்டுடன் பக்தர்கள் சென்ற ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தது. இதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





