சென்னை வந்தடைந்தார் ராஜ்நாத் சிங்


சென்னை வந்தடைந்தார் ராஜ்நாத் சிங்
x

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை இன்று மாலை வெளியிடுகிறார் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்.

சென்னை,

மறைந்த தி மு க தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு, மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6.50 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் வகையில், 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டு பேசுகிறார்.

இந்தநிலையில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்தடைந்தார் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங். சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக சார்பில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.


Next Story