சாலையில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

கண்ணண்டஅள்ளி கூட்டு ரோடு பகுதியில் சாலையில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கண்ணண்டஅள்ளி கூட்டு ரோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அத்தியானூர் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுகின்றனர். எனவே சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும். சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





