பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ம.க. நிர்வாகி அதிரடி கைது


பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ம.க. நிர்வாகி அதிரடி கைது
x

திருப்பத்தூரில் பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ம.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்,

நாட்றம்பள்ளி அருகே பெண் காவலருக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி கொலை மிரட்டல் விடுத்த பா.ம.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் பகுதியைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் பாஸ்கர். இவர் பிரியங்கா என்ற பெண் காவலருடன் பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில், சில மாதங்களாக பிரியங்கா பேசாததால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் அவருக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பாஸ்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story