பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடைபெற்றது.

பேரூராட்சி மன்ற தலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தின்போது பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

மேலும் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதில் பேரூராட்சி உறுப்பினர்கள், மகளிர் குழுவினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story