நாகர்கோவில்-பன்வெல் இடையே ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்


நாகர்கோவில்-பன்வெல் இடையே ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்
x

நாகர்கோவில்-பன்வெல் இடையே ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தடுக்க ஆகஸ்டு 22, 29 மற்றும் செப்டம்பர் 5-ந்தேதிகளில் காலை 11.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரெயில் (வண்டி எண். 06071) புறப்பட்டு அடுத்தநாள் இரவு 10.45 மணிக்கு மராட்டிய மாநிலம் பன்வெல் சென்றடையும். மறுமார்க்கமாக, ஆகஸ்டு 24, 31 மற்றும் செப்டம்பர் 7-ந்தேதிகளில் நள்ளிரவு 12.10 மணிக்கு மராட்டிய மாநிலம் பன்வெல்லில் இருந்து சிறப்பு ரெயில் (06072) புறப்பட்டு அடுத்தநாள் காலை 10 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.

இவ்வாறு அதில் உள்ளது.


Next Story