ஓணம் பண்டிகை: எர்ணாகுளம்-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


ஓணம் பண்டிகை: எர்ணாகுளம்-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

ஓணம் பண்டிகையையொட்டி எர்ணாகுளம்-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளம், கர்நாடக மாநிலம் பெங்களூரு எலகங்கா இடையே சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எர்ணாகுளம்-எலகங்கா சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06101) வருகிற 4 மற்றும் 6-ந்தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 11 மணிக்கு எலகங்காவை வந்தடையும்.

மறுமார்க்கமாக எலகங்கா-எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (06102) வருகிற 5, 7-ந்தேதிகளில் எலகங்காவில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஒயிட்பீல்டு, கே.ஆர்.புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story