கிணற்றில் மூழ்கி முதியவர் பலி


கிணற்றில் மூழ்கி முதியவர் பலி
x
தினத்தந்தி 5 Jun 2023 6:45 PM (Updated: 6 Jun 2023 6:22 AM)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே கிணற்றில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே கீழக்கல்பூண்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68). நேற்று முன்தினம் மாலை இவர் அதே பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே ரவிச்சந்திரன் என்பருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த அவர் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்மோட்டர் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர். பின்னர் பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story