சரக்கு வேன் மோதி முதியவர் பலி

சரக்கு வேன் மோதி முதியவர் பலியானார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 65). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்த நிலையில் இவர் ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் ரோட்டில் கல்லாத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





