கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்  அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
x

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காக கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது. தென் தமிழகமான கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சை, விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இன்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். மேலும் இந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், பயணிகளுக்கான வசதிகள் குறித்து சேகர்பாபு கேட்டறிந்தார்.


Next Story