கிருஷ்ணகிரியில்பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


கிருஷ்ணகிரியில்பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2022 7:00 PM GMT (Updated: 16 Oct 2023 5:24 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் 539 மனுக்களை வழங்கினார்கள்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வேடியப்பன், சுந்தரராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story