சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை சேர்ந்தவர் வசந்தன் (வயது 22), கூலி தொழிலாளி. இவர் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஜெயமங்களம் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, சிறுமியை திருமணம் செய்த வசந்தன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் கொளஞ்சியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்தார். மேலும், வசந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





