மழைநீரால் நிரம்பிய ராசாத்தா கோவில் குட்டை


மழைநீரால் நிரம்பிய ராசாத்தா கோவில் குட்டை
x

திருமுருகன்பூண்டி அருகே மழைநீரால் ராக்கியாபாளையம் ராசாத்தா கோவில் குட்டை நிரம்பி உள்ளது. குட்டையை சுற்றி பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

திருமுருகன்பூண்டி அருகே மழைநீரால் ராக்கியாபாளையம் ராசாத்தா கோவில் குட்டை நிரம்பி உள்ளது. குட்டையை சுற்றி பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குட்டை

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சி ராக்கியாபாளையம் ராசாதாத்தா கோவில் அருகே வருவாய்துறைக்கு சொந்தமான குட்டை உள்ளது. இந்த குட்டையின் பரப்பளவு 4.82 ஏக்கராகும். இந்த நலையில் கடந்த 2 மாதமாக திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் ழை பெய்ததன் பயனாக ராசாத்தா கோவில் குட்டை பாதி அளவு மழைநீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் குட்டையை சுற்றி பச்சை பசேசென மரங்கள் பசுமையாக அமைந்துள்ளது. ஆனால் குட்டையின் உள்புறமும், வெளிபுறமும் அதிக அளவில் சீமக்கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.

திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பெரிய அளவிலான குளம், குட்டைகள் இல்லாத நிலையில் 4 ஏக்கர் பரப்பளவிலான குட்டையை பராமரித்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய திட்டமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

நடைபாதை அமைக்க முடிவு

திருப்பூரில் நொய்யல், நல்லாறு ஆகிய 2 ஆறுகள் இருந்தாலும் அதில் பெரும்பாலான நேரங்களில் கழிவுநீரே பாய்கிறது. இதற்கு அடுத்தபடியாக ஆண்டிபாளையம் குளம் முக்கிய நீர்நிலையாக உள்ளது. அந்த குளம் தூர்வாரப்பட்டு, குளத்தின் அருகே பூங்கா அமைத்து பொழுதுபோக்கு அம்சமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ராக்கியாபாளையத்தில் ராசாத்தா கோவில் அருகே உள்ள குட்டையை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும். அந்த குட்டையை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ள சீமக்கருவேல மரங்களை உடடினயாக அகற்ற வேண்டும். அதேபோல் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டையில் கலப்பதை தடுக்க வேண்டும்.

மேலும் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குட்டையை சுற்றி நடைபாதை, பூங்கா உள்ளிட்ட பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி தலைவர் குமார் மற்றும் நகராட்சி கமிஷனர் முகம்மது சம்சுதீன் ஆகியோர் கூறும்போது, குட்டையை சுற்றி ரூ.2 கோடி மதிப்பில் நடைபாதை அமைப்பது உள்பட பல்வேறு திட்டங்களை அமல்படுத்த அரசிடம் அனுமதி கோரி உள்ளோம். அரசின் அனுமதி கிடைத்து, நிதி ஒதுக்கப்பட்டால் உடனடியாக பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்கள்.


Related Tags :
Next Story