மீனவர் வலையில் சிக்கிய 5 கிலோ எடை கொண்ட கொடுவா மீன்

மீனவர் வலையில் 5 கிலோ எடை கொண்ட கொடுவா மீன் சிக்கியது.
கட்டுமாவடி அருகே செம்பியன் மகாதேவிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சேகர் மற்றும் பரமசிவம். இவர்கள் இருவரும் கரையோரத்தில் பிடிக்கப்படும் பட்டி வலைக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பட்டிவலையில் 5 கிலோ எடை கொண்ட கொடுவா மீன் சிக்கி இருந்தது. இந்த மீன் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. கார்த்திகை மாதம் என்பதால் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. இதனால் ஒரு கிலோ ரூ.520 என்ற கணக்கில் 5 கிலோவிற்கும் சேர்த்து ரூ.2,600-க்கு விற்பனையானது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





