பெரியகுளத்தில்ஏ.டி.எம். மையத்தில் இறந்து கிடந்த கண்டக்டர்


பெரியகுளத்தில்ஏ.டி.எம். மையத்தில் இறந்து கிடந்த கண்டக்டர்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் வடகரையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கண்டக்டர் இறந்து கிடந்தார்.

தேனி

பெரியகுளம் வடகரையில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று ஒருவர் பணம் எடுக்க சென்றார். அப்போது ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவர் பெரியகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மயங்கி கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள நரியூத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டரான பொன் சதீஷ் (வயது 32) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story