கிருஷ்ணராயபுரம்-வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பலத்த மழை

கிருஷ்ணராயபுரம்-வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர், மாயனூர், லாலாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், மூலிமங்கலம், புகழூர்,நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு7.30 மணி முதல் 8.30 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





