பிளஸ்-1 துணைத்தேர்வு ஹால்டிக்கெட் 25-ம் தேதி வெளியீடு


பிளஸ்-1 துணைத்தேர்வு ஹால்டிக்கெட் 25-ம் தேதி வெளியீடு
x

பிளஸ்-1 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற 25-ம் தேதி வெளியிடப்படுகிறது.

சென்னை,

அரசு தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிளஸ்-1 வகுப்புக்கான துணைத்தேர்வு அடுத்த மாதம் (ஜூலை) நடைபெற உள்ளது. இந்தத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வருகிற 25-ம் தேதி வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதவிர, செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.

ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் தேர்வெழுத அனுமதி வழங்கப்படாது. எனவே, உரிய வழிமுறைகளை பின்பற்றி தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மேலும், துணைத்தேர்வுக்கான விரிவான கால அட்டவணையை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story