திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளி கைது


திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளி கைது
x

போக்சோ சட்டத்தில் தொழிலாளியை போலீசார் கைதுசெய்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே மேற்கத்தியனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் தாலுகா போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.


Next Story