பெருமாள் சிலை கண்டெடுப்பு

ஏர்வாடி அருகே பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.
ஏர்வாடி:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் மேலூரில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண் பணியாளர்கள் அங்குள்ள ஊருணியை தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்ணில் புதைந்த நிலையில் பழமையான பெருமாள் சிலையை கண்டெடுத்தனர் அதன் உயரம் சுமார் 4 அடியாகும். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நாங்குநேரி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் பெருமாள் சிலை பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு நாங்குநேரி தாசில்தார் முன்னிலையில் அங்குள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





