திருச்செந்தூரில் ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் கலெக்டர் ஆய்வு

திருச்செந்தூரில் ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம், ஆதரவற்றோர் மன நல காப்பகத்தினை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெறுவோரிடம் அவர் நலம் விசாரித்தார். இந்த ஆய்வின் போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் கண்மணி, தாசில்தார் வாமனன், அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் பொன்ரவி மற்றும் மன நலக்காப்பக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





