காதலனுடன் மகள் ஓட்டம்.. மன உளைச்சலில் தாய் தூக்கிட்டு தற்கொலை


காதலனுடன் மகள் ஓட்டம்.. மன உளைச்சலில் தாய் தூக்கிட்டு தற்கொலை
x

வீட்டை விட்டு வெளியேறிய மாணவியை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

விழுப்புரம் ,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காணிமேடு பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, விவசாயி. இவருடைய மனைவி வினிதா (வயது 35). இவர்களது மகள் சாதனா (17) மரக்காணத்தில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு மாயமானார். பல இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த கோபி என்ற வாலிபர், மாணவியை காதலித்ததும், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை அழைத்துச்சென்றதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

மகள் காதலனுடன் ஓடியதால் அவரது தாய் வினிதா விரக்தியில் காணப்பட்டார். இந்தநிலையில் வினிதா நேற்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனுடன் மகள் ஓட்டம் பிடித்ததால் வேதனை அடைந்த தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story