முட்புதரில் கிடந்த 3 நாட்டுத்துப்பாக்கிகள் மீட்பு

தொப்பூர் அருகே முட்புதரில் கிடந்த 3 நாட்டுத்துப்பாக்கிகளை போலீசார் மீட்டனர்.
நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே கம்மம்பட்டி கஸ்தூரிகோம்பை வனப்பகுதியில் உள்ள அனுமன் கோவில் பகுதியில் முட்புதரில் 3 நாட்டுத்துப்பாக்கிகள் கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று 3 நாட்டுத்துப்பாக்கிகளையும் மீட்டனர். இதுகுறித்து கம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கிகளை முட்புதரில் போட்டு சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





