சென்னை சென்டிரல் - அரக்கோணம் மின்சார ரெயில்கள் இன்று பகுதி நேர ரத்து


சென்னை சென்டிரல் - அரக்கோணம் மின்சார ரெயில்கள் இன்று பகுதி நேர ரத்து
x

சென்னை சென்டிரல் - அரக்கோணம் மின்சார ரெயில்கள் இன்று பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் அரக்கோணம் பணிமனையில் இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (29-ந்தேதி) மதியம் 2.40 மணி முதல் மாலை 6.40 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) மதியம் 12.40, 1.25 மாலை 3.50, 4.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, அரக்கோணத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) மாலை 3.40, 4.50, 6 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில் அரக்கோணம் - திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) மதியம் 2.15, மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, திருத்தணியிலிருந்து இன்று மற்றும் நாளை மாலை 3.45, 5, 6.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில் திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையிலிருந்து இன்று மற்றும் நாளை மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, அரக்கோணத்தில் இருந்து இன்று மற்றும் நாளை மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் அரக்கோணம்- திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story