தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம் 

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கடலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 18 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story