சென்னை உள்பட 9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு


சென்னை உள்பட 9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு
x

கோப்புப்படம் 

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 14-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story