தமிழ்நாடு அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணித்த பயணிகளுக்கு ரொக்கப் பரிசு


தமிழ்நாடு அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணித்த பயணிகளுக்கு ரொக்கப் பரிசு
x

சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பயணிகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பயணிகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆகஸ்டு மாதத்திற்கான குலுக்கல் முறையில் 13 பயணிகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்தார்.

அதன்படி, குரு பிரசாத், ராஜா ஞானபிரகாசம், சபரிகிரி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், 10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள 13 பயணிகளுக்கும் விரைவில் பரிசுகள் வழங்கப்படும். மேற்கண்ட தகவல்கள் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story