ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை


ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு காணொலி காட்சியின் மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

சென்னை,

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வக்கீல் பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு தொடர்பாக மாநகராட்சி கமிஷனர், எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இந்த கோரிக்கை தொடர்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

அதன்படி, இந்த மனுவை தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு காணொலி மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் தனி நீதிபதி யார்? என்பதை ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் முடிவு செய்து அறிவிப்பார் என கூறப்படுகிறது.


Next Story