பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது


பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது
x

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல் பவானி ஆற்றின் வழியாக தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

105 அடியை...

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2964 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ் பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்ய பட்டதால் கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்கு இதேபோல் சீராக தண்ணீர் வரத்து இருந்தால் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்கிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

1 More update

Next Story