மதுரை புத்தக திருவிழாவில் பக்தி பாடலைக் கேட்டு திடீரென சாமி ஆடிய மாணவிகள்


மதுரை புத்தக திருவிழாவில் பக்தி பாடலைக் கேட்டு திடீரென சாமி ஆடிய மாணவிகள்
x

மதுரை புத்தக திருவிழாவில் பக்தி பாடலைக் கேட்டு மாணவிகள் திடீரென சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ப.பா.சி. ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இன்று தொடங்கி 11 நாட்கள் 16-ம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. தினந்தோறும் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை புத்தக திருவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தக திருவிழாவில் தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், இன்று புத்தக திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மேயர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அப்போது பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அதைக் கேட்டு புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த சில மாணவிகள் திடீரென சாமி ஆடத் தொடங்கினர். அதில் சிலர் மயங்கி விழுந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவர்களை இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் அந்த மாணவிகளை அழைத்து வந்த ஆசிரியர்கள் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.



Next Story