கார் மோதி முதியவர் சாவு

கார் மோதி முதியவர் சாவு
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் உள்ள பரமத்திவேலூர் மெயின் ரோட்டில் டி.சி.எம்.எஸ். பெட்ரோல் பங்க் அருகில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றார். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து வாலரைகேட் நோக்கி சென்ற கார் முதியவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்து விட்டார். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





