தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை


தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 13 May 2024 7:08 AM GMT (Updated: 13 May 2024 10:31 AM GMT)

இளைஞர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

சென்னை,

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து கொண்டே பகுதி நேரத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். சிட்லபாக்கத்தில் பெண் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். 3 பேரிடம் இருந்த ஆயுதத்தால் சரமாரியாக அவரை ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளனர்.

பலத்த காயமடைந்த உதயகுமார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 6 மாதங்களுக்கு முன் உதயகுமார் ஆட்டோவை சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டதால் முன்விரோதம் ஏற்பட்டு கொலை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


Next Story