எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் கைது


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் கைது
x

கோப்புப்படம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி,

தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்கள் இலங்கை மன்னார் தென்கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story