பட்டதாரிகளுக்கு வேலை


பட்டதாரிகளுக்கு வேலை
x

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைகளில் சப்-இன்ஸ்பெக்டர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டெல்லி காவல் துறை (ஆண்-228), பெண் (112), பி.எஸ்.எப், சி.ஆர்.பி.எப், சி.ஐ.எஸ்.எப், ஐ.டி.பி.எப், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட மத்திய ஆயுத படைகளில் (3900) என மொத்தம் 4300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

30-8-2022 அன்றைய தேதிப்படி பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் 1-1-2022 அன்றைய தேதிப்படி 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1997-க்கு முன்போ, 1-1-2002-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-8-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Next Story