விபத்தில் பெண் சாவு: மாநகராட்சி லாரி டிரைவர் கைது


விபத்தில் பெண் சாவு: மாநகராட்சி லாரி டிரைவர் கைது
x

பெங்களூருவில் விபத்தில் பெண் உயிரிழந்தார்.

பெங்களூரு:

பெங்களூரு நாகரபாவி சர்க்கிள் பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் மீது மாநகராட்சி குப்பை லாரி மோதியது. இந்த விபத்தில் விஜயகலா (வயது 37) என்ற பெண் உயிரிழந்தார். அவரது கணவர் யோகேந்திரா படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லாரியை டிரைவர் வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்பது தெரிந்தது. இதனால் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story