ஜம்மு-காஷ்மீரை ஆட்டிப்படைத்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்


ஜம்மு-காஷ்மீரை ஆட்டிப்படைத்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்
x

கோப்புப்படம்

சிறப்பு பிரிவு 370-ஐ நீக்கியதால் காஷ்மீர் மற்றும் லடாக் முன்னேற்றமும், வளர்ச்சியும் கண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 2-வது முறையாக தொடர்ந்து வென்ற பா.ஜனதா, மத்தியில் ஆட்சி அமைத்ததும் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் இதே ஆகஸ்ட் 5-ந் தேதி ஜம்மு காஷ்மீரில் சிறப்பு பிரிவு 370-ஐ ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக்கியது.

இந்நிலையில் பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரை ஆட்டிப்படைத்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

நமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமான 370 மற்றும் 35(A) சட்டங்களை ரத்து செய்ய இந்திய நாடாளுமன்றம் முடிவு செய்து இன்று 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். அரசியலமைப்பை உருவாக்கிய பெரிய மனிதர்கள் மற்றும் பெண்களின் பார்வைக்கு ஏற்ப, இந்திய அரசியலமைப்பு இந்த இடங்களில் எழுத்திலும் ஆவியிலும் செயல்படுத்தப்பட்டது என்று அர்த்தம்.

ரத்து செய்யப்பட்டதன் மூலம் வளர்ச்சியின் பலன்களை இழந்த பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில், பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரை ஆட்டிப்படைத்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு எங்கள் அரசாங்கம் தொடர்ந்து உழைத்து, வரும் காலங்களில் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட நாளில் அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தாங்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தன்வீர் சாதிக் உள்ளிட்டோர் தங்களை பாதுகாப்புப் படையினர் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.


Next Story