நாடாளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றம் - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்


நாடாளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றம் - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
x

நாடாளுமன்றத்தில் காந்தி சிலை பின்புற வாசலுக்கும் பின்னே வைக்கப்பட்டிருப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் வாசலுக்கு முன் இருந்த மகாத்மா காந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகள் கட்டடத்தின் பின்னே உள்ள பூங்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் நாடாளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

"நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்னே இருந்த உனது திருவுருவச் சிலை இப்பொழுது பின்புற வாசலுக்கும் பின்னே வைக்கப்பட்டுள்ளது. பாசிஸ்டுகள் அவைக்குள் வருகிற பொழுது உன் முகத்தில் முழிக்கக்கூடாதென நினைக்கிறார்கள். நீ அல்லவோ எம் தேசத்தின் தந்தை. வாழ்க நீ எம்மான். என்றென்றும் வணங்குகிறோம் உன்னை."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story