சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் - சரத்பவார்


சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் - சரத்பவார்
x

துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று சரத்பவார் கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா சார்பில் மீண்டும் ஓம் பிர்லா, இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் (காங்கிரஸ்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சபாநாயகர் தேர்தல் குறித்து தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் கூறியதாவது:-

பாரம்பரியமாக சபாநாயகர் பதவி ஆளும் கட்சிக்கும், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கும் சென்றது. ஆனால் நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டுகளில் இது நடக்கவில்லை. நாடாளுமன்றத்தில் பா.ஜனதா அல்லாத தலைவர்கள் என் கருத்தை கேட்டனர். சபாநாயகர் தேர்தலை போட்டியின்றி நடத்த ஒப்புக்கொள்கிறோம் என்று அரசிடம் சொல்லும்படி நான் அவர்களுக்கு அறிவுறுத்தினேன். அதே நேரத்தில், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story