நாடாளுமன்ற கட்டடத்தில் மழைநீர் கசிவு: காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ்


நாடாளுமன்ற கட்டடத்தில் மழைநீர் கசிவு: காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ்
x

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மையப்பகுதியில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மையப்பகுதியில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. மழை நீர் கசியும் பகுதியில் பிளாஸ்டிக் வாளியை வைத்து பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் தேங்கியதுடன், புதிய கட்டடத்தின் மையப் பகுதியில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழைநீர் கசிந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

அந்த நோட்டீசில் நாடாளுமன்றத்தின் மையப் பகுதியில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளது குறித்து அவை நடவடிக்கையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும். அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் அடங்கிய சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு நாடாளுமன்ற கட்டடத்தை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த வீடியோவைப் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story