புனே விமான நிலையம் 'துக்காராம் மகாராஜ் விமான நிலையம்' என பெயர் மாற்றம்


புனே விமான நிலையம் துக்காராம் மகாராஜ் விமான நிலையம் என பெயர் மாற்றம்
x

துறவி துக்காராம் மகாராஜ் பக்தி கவிதை எழுதுவதிலும் பாடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

புனே,

17-வது நூற்றாண்டைச் சேர்ந்த துறவி துக்காராம் மகாராஜ்ஜை சிறப்பிக்கும் வகையில் புனே விமான நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்டி மராட்டிய அரசு கவுரவித்துள்ளது. இன்று நடைபெற்ற மராட்டிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மராட்டிய வரலாற்றில், முக்கிய ஆன்மிகவாதியான துறவி துக்காராம் மகாராஜ்க்கு மரியாதை செலுத்துவதற்காக புனே விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. துக்காராம் தனது பக்தி கவிதைகளுக்காக நன்கு அறியப்பட்டவர் மற்றும் கீர்த்தனைகள் எனப்படும் பக்தி பாடல்களை எழுதுவதிலும் பாடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

புனே விமான நிலையத்தின் பெயரை மாற்றுவதற்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி முன்னதாகவே பரிந்துரை செய்து, மத்திய அரசிடம் விரைவில் அனுமதி பெறப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மொஹோல் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், புனே சர்வதேச விமான நிலையத்தின் பெயரை ஜகத்குரு சந்த்ஸ்ரேஸ்தா துக்காராம் மகாராஜ் புனே சர்வதேச விமான நிலையம் என மாற்றுவதற்கான முதல் நடவடிக்கைக்கு, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Next Story