அரசு முறை பயணமாக புரூனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி


அரசு முறை பயணமாக புரூனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி
x

இந்திய பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

புதுடெல்லி,

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான புரூனேவுடன் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 40-வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி பிரதமர் மோடி அரசு முறை பயணமாக புரூனே செல்கிறார். வருகிற 3 மற்றும் 4-ந்தேதிகளில் புரூனேயில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.புரூனே பயணத்தை முடித்து விட்டு 4-ந்தேதி பிரதமர் மோடி சிங்கப்பூருக்கும் செல்கிறார்.

5-ந்தேதி வரை சிங்கப்பூரில் இருக்கும் பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து பல்வேறு துறை சார்ந்த உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.


Next Story