பெண் காவலரை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்


பெண் காவலரை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்
x

பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தானே,

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள பந்த் நகர் காவல் நிலையத்தில் 26 வயது பெண் காவலர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், மும்பையில் பணியாற்றி வரும் 36 வயதான சப்-இன்ஸ்பெக்டர், தன்னை இரு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, முதலில் இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர். இதற்கிடையே திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண் காவலரை இரு ஆண்டுகளாக சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன், பெண் காவலரிடம் பல்வேறு காரணங்களை கூறி லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுள்ளார். இவை அனைத்தும் 2020 - 2022க்கு இடையில் நடைபெற்றுள்ளது.

தற்போது அந்த சப்-இன்ஸ்பெக்டர், உனது கணவனை விட்டு விலகிவிடு எனக்கூறி பெண் காவலருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இல்லையென்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டலும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story