மராட்டியம்; பேசியபடியே நடந்து சென்று, திடீரென ரெயில் தண்டவாளத்தில்... தந்தை, மகனின் அதிர்ச்சி செயல்


மராட்டியம்; பேசியபடியே நடந்து சென்று, திடீரென ரெயில் தண்டவாளத்தில்... தந்தை, மகனின் அதிர்ச்சி செயல்
x

மராட்டியத்தின் விரார் பகுதியில் இருந்து சர்ச்கேட் நோக்கி சென்ற ரெயில் மோதி உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

புனே,

மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் மும்பை நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் பயந்தர் ரெயில் நிலையம் உள்ளது. அதன் நடைமேடையில் 2 பேர் பேசியபடியே நடந்து செல்கின்றனர். அப்போது ரெயில் ஒன்று அந்த வழியே வந்து கொண்டிருந்தது.

நடைமேடையின் இறுதி பகுதிக்கு வந்ததும் அவர்கள் இரண்டு பேரும் கீழே தண்டவாளத்தில் இறங்கி அந்த பக்கம் செல்கின்றனர். இருவரும் கைகளை கோர்த்தபடி சென்று, திடீரென ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே படுத்து கொள்கின்றனர். ரெயில் ஒன்று நெருங்கி வந்தபோது, இவர்கள் செய்த செயல் சுற்றியிருப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விரார் பகுதியில் இருந்து சர்ச்கேட் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த ரெயில், ஒரு சில வினாடிகளில் இருவர் மீதும் ஏறி சென்று விட்டது. இதில் அவர்கள் 2 பேரும் உயிரிழந்து விட்டனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகன் என தெரிய வந்துள்ளது. அவர்கள் முறையே ஹரீஷ் மேத்தா (வயது 60) மற்றும் ஜெய் மேத்தா (வயது 35) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி தற்செயலாக நடந்த விபத்து என போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர்.


Next Story