நிலவில் தரையிறங்கிய ஜப்பான் விண்கலம் - பிரதமர் மோடி வாழ்த்து


நிலவில் தரையிறங்கிய ஜப்பான் விண்கலம் - பிரதமர் மோடி வாழ்த்து
x

விண்வெளி ஆராய்ச்சியில் ஜப்பானுடன் இணைந்து பணியாற்றுவதை இஸ்ரோ எதிர்நோக்கியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி ஆய்வு செய்யும் பணிகளை பல்வேறு நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதில் இந்தியா உள்ளிட்ட ஒருசில நாடுகளே வெற்றியும் பெற்று இருக்கின்றன. இந்த வரிசையில் ஜப்பான் அனுப்பிய விண்கலத்தின் லேண்டர் வாகனம் (ஸ்லிம்) நேற்று வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது.

இதன் மூலம் அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தியாவை தொடர்ந்து 5-வது நாடாக ஜப்பானும் நிலவில் தரை இறங்கி சாதித்து உள்ளது. இந்நிலையில் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பானுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்த ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் (JAXA) மற்றும் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு வாழ்த்துக்கள். விண்வெளி ஆராய்ச்சியில் ஜப்பானுடன் இணைந்து பணியாற்றுவதை இஸ்ரோ எதிர்நோக்கியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.



1 More update

Next Story